டெக்சாஸில் உள்ள அமெரிக்க எரிசக்தி நிறுவனமான வலேரோ எனர்ஜிக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
அடர்த்தியான கருப்புப் புகையும் தீப்பிழம்புகளும் வானத்தில் பரவியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கட்டிடங்களை உலுக்கிய ஒரு சக்திவாய்ந்த வெடிச்சத்தத்தை அப்பகுதி மக்கள் கேட்டனர். இதையடுத்து குடியிருப்பாளர்களை வீட்டிற்குள் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள அதன் வகையிலான மிகப்பெரிய ஆலைகளில் ஒன்றான, போர்ட் ஆர்தரில் உள்ள அந்த சுத்திகரிப்பு நிலையத்தில், திங்கள்கிழமை மாலை இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கை தொடர்ந்தது. அப்பகுதியில் காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

