உர்தோர்ஃப் நகராட்சிக்குள், விமான நிலையம்/பாசல் நோக்கிச் செல்லும் A3 நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு ஒரு கடுமையான விபத்து ஏற்பட்டது.
33 வயதான ஒரு வொறி ஓட்டுநர், வரிசையாக நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதினார். இந்த மோதலின் வேகத்தால், பின்னால் இருந்த மூன்று கார்களும் மோதிக்கொண்டன.
பின்னால் இருந்த வாகனத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். இரண்டு பெரியவர்கள் படுகாயமடைந்த நிலையில், அவசரகால சேவைகளால் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டனர். அவர்களது ஒன்றரை வயதுக் குழந்தை சிறு காயங்களுடன் தப்பியது.
காயமடைந்த மூவரும் மீட்பு ஹெலிகொப்டர் மற்றும் அம்புலன்ஸ் மூலம் வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்றொரு பெண் ஓட்டுநரும் சிறு காயங்களுடன் தப்பினார்.
ஒரு சிறு குழந்தையுடன் இருந்த தம்பதியினர் மற்றும் லொரி ஓட்டுநர் ஆகியோர் காயமின்றித் தப்பினர்.
விபத்தை அடுத்து பாசல் நோக்கிய A3 நெடுஞ்சாலை பல மணிநேரம் முழுமையாக மூடப்பட்டதால், நெடுஞ்சாலையிலும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் குறிப்பிடத்தக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மூலம்- swissinfo

