20.5 C
New York
Friday, June 20, 2025

அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவிட் தடுப்பூசி: இந்திய மருத்துவர்கள் வெளியிட்டுள்ள தகவல்

கொவிஷுல்ட் (Covishield) தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என வெளியாகியுள்ள தகவல் புதிதல்ல எனவும் தடுப்பூசி ஏற்றியவர்களை தைரியமாக இருக்குமாறும் இந்திய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கொவிஷுல்ட் தடுப்பூசி அரிதாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

மேலும், இது மிகவும் அரிதாக சிலருக்கு குருதி உறைவு நோயை ஏற்படுத்தியுள்ளதோடு குருதிக் கலங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, கொவிஷுல்ட் தடுப்பூசி, பல்வேறு குறைபாடுகளை கொண்டுள்ளதோடு அதன் செயற்றிறன் மிகவும் அதிகமாக்கி காட்டப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles