சுவிட்சர்லாந்தின் வின்டர்தூர் நகரில் உள்ள ரயில் நிலையத்தில், ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் மூன்று பேரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற, 31 வயதான சுவிஸ் நாட்டவரான அந்த தாக்குதல்தாரியை சூரிச் மாகாண காவல்துறையினர்,கைது செய்தனர்.
இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எனினும், நேரில் கண்ட சாட்சிகள் பலர், அந்த நபர் “அல்லாஹு அக்பர்” என்று கத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8.30 மணிக்குச் சற்று முன்னதாக நடந்த இந்தத் தாக்குதலில், 28, 43 மற்றும் 52 வயதுடைய மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
ரயில் நிலையப் பகுதி தற்போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சூரிச் மாகாண காவல்துறை பின்னர் கூடுதல் தகவல்களை வழங்கும்.
மூலம்- swisssinfo

