அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் உள்ள லொக்ஹீட் மார்ட்டின் ஆலையில் முதல் விமானத்தின் ஒருங்கிணைப்புப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்திற்கு F-35 போர் விமானங்களை வழங்கும் பணி ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சுவிஸ் விமானங்களுக்கான முதல் பாகங்களின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று ஆர்மோ சுவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பின் அடுத்த கட்டங்கள் வரும் மாதங்களில் தொடரும்.
உலகெங்கிலும் உள்ள 2,100-க்கும் மேற்பட்ட துணை ஒப்பந்தக்காரர்கள் இந்த உற்பத்திச் சங்கிலியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முதல் எட்டு F-35 விமானங்கள், 2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் சுவிஸ் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும்.
ஓராண்டு கழித்து சுவிட்சர்லாந்திற்கு அவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீதமுள்ள F-35 விமானங்கள், இத்தாலியின் கேமரி நகரில் உள்ள இறுதி ஒருங்கிணைப்புத் தளத்திலிருந்து வழங்கப்படும்.
மூலம்- swissinfo

