20.8 C
New York
Monday, June 1, 2026

சக்கர நாற்காலியில் சென்ற பெண் ரயில் மோதி மரணம்.

துர்காவ் மாகாணத்தின் வெயின்ஃபெல்டன் பகுதியில் உள்ள ஒரு ரயில்வே கடவையில் யில் மோதியதில் 55 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அந்தப் பெண், சனிக்கிழைமை மதியம் 1 மணியளவில், ஃப்ரீஸ்ட்ராஸ் ரயில்வே கடவையில் மின்சார சக்கர நாற்காலியில் சென்று கொண்டிருந்தார்.

பெர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், அவசரகால பிரேக்கை இயக்கிய போதிலும், அவர் மீது மோதியது.

படுகாயமடைந்த அந்த 55 வயதுப் பெண், விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles