29.4 C
New York
Friday, June 5, 2026

அமெரிக்க புறப்படவிருந்த லுப்தான்சா விமானத்திற்கு நேர்ந்த கதி.

ஜெர்மனியில் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அமெரிக்கா புறப்பட தயாராக இருந்த லுப்தான்சா விமானத்தின் முன்சக்கர அமைப்பு உடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் நேற்று மதியம் 12:45 மணிக்கு எல்எச்450 என்ற லுப்தான்சா நிறுவனத்தின் 787- வகை விமானம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சுக்குப் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது பிராங்பர்ட் விமான நிலையத்தில் ஒரு நுழைவாயிலில் போயிங் 787 ரக விமானத்தின் முன்சக்கர அமைப்பு எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் விமானத்தின் முன்பகுதி உடைந்ததில் பல ஊழியர்கள் காயமடைந்தனர்.

மூக்கு கியர் என்பது முன்பக்க தரையிறங்கும் சக்கர அமைப்பாகும், இது முன்பக்க எடை தாங்குதல், திசை திருப்புதல் மற்றும் அதிர்வு உறிஞ்சுதல் ஆகியவற்றை வழங்குகிறது.

பயணிகள் விமானத்தில் அப்போது ஏறவில்லை. ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். காயம் அடைந்த ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்தில் விமானத்தின் ஒரு பகுதி தரையில் சாய்ந்தது. இதையடுத்து பல அவசரகால வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. லொஸ் ஏஞ்சல்ஸுக்குப் புறப்படவிருந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டது.

Related Articles

Latest Articles