கூட்டாட்சி பாதுகாப்பு நிறுவனமான RUAG, ஹக்கர்களுக்குப் பணயத்தொகை செலுத்தியுள்ளது. கடந்த இலையுதிர்காலத்தில் அமெரிக்காவில் உள்ள RUAG துணை நிறுவனமான LLC-ஐ ஹேக் செய்து மிரட்டிய அகிரா என்ற ஹக்கர் குழுவின் கோரிக்கையை அடுத்தே, பணயத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
“நாங்கள் ஒரு சிறிய தொகையைச் செலுத்தினோம், அதிர்ஷ்டவசமாக அனைத்துத் தரவுகளையும் திரும்பப் பெற்றோம்,” என்று RUAG இயக்குநர்கள் குழுவின் தலைவர் யுர்க் ரோத்தெலி, சனிக்கிழமை கூறினார். அவர் சரியான தொகையைக் குறிப்பிடவில்லை.
ஹக்கர்கள் 2025 இலையுதிர்காலத்தில் அமெரிக்கத் துணை நிறுவனத்தின் கணினிகளிலிருந்து தரவுகளைத் திருடி, அவற்றை வெளியிடுவதாக மிரட்டியிருந்தனர்.
இந்த முடிவு, இணையக் குற்றவாளிகளுக்குப் பணயத்தொகை செலுத்துவதற்கு எதிராகப் பொதுவாக அறிவுறுத்தும் கூட்டாட்சி இணையப் பாதுகாப்பு அலுவலகத்தின் (FOCBS) பரிந்துரைகளுக்கு முரணானது.
இத்தகைய கொடுப்பனவுகள் மேலும் தாக்குதல்களை ஊக்குவிப்பதோடு, குற்றச் செயல்களுக்கு நிதியளிப்பதற்கும் பங்களிக்கக்கூடும்.
மூலம்- swissinfo

