சென் காலனில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 6:10 மணியளவில், முகமூடி அணிந்த நபர் ஒருவர் பெட்ரோல் நிலையக் கடை ஒன்றில் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளி, கோசாவு ZH திசையில் ஒரு மின்சார ஸ்கூட்டரில் தப்பிச் சென்றார். உடனடித் தேடுதல் நடத்தப்பட்ட போதும் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
தேடப்படும் அந்த நபர் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர் என்றும், கருமையான கண்களையும் நடுத்தர உடலமைப்பையும் கொண்டவர் என்றும் காவல்துறை விவரிக்கிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் சுவிட்சர்லாந்தின் பாதி மக்கள் கால்பந்து தேசிய அணிக்கு உற்சாகம் அளித்துக் கொண்டிருந்த வேளையில், முகமூடி அணிந்த நபர், கடைக்குள் நுழைந்து, பெண் ஊழியரைக் கத்தியைக் காட்டி மிரட்டினார்.
அவர் பணத்தைக் கொடுத்ததும் தப்பிச் சென்றுள்ளார். அந்த ஊழியருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
மூலம்- bluewin


