கடுமையான இடியுடன் கூடிய புயல், சூரிச் விமான நிலையத்தின் விமானச் செயல்பாடுகளை “கணிசமாக” பாதித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மதிய உணவு நேரத்திற்குள், 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் ரத்துகள் எதிர்பார்க்கப்படுவதாக சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (SWISS) தெரிவித்துள்ளது.
இதனால் சுமார் 3,100 பயணிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் வரும் விமானங்களில் மூன்று மணி நேரம் வரை தாமதம் ஏற்படக்கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்களே, விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இதுபோன்ற சூழ்நிலைகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான ஓடுபாதையில் செய்யப்படும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
பணியாளர்கள் விமானங்கள் மற்றும் பிற உலோகக் கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். இதனால், விமானங்களில் சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ, எரிபொருள் நிரப்பவோ அல்லது அடுத்த பயணத்திற்குத் தயார்ப்படுத்தவோ முடியாது.
தரைவழிச் செயல்பாடுகள் கிட்டத்தட்ட முடங்கி விடுகின்றன, இது மேலும் தாமதங்களுக்கு வழிவகுக்கிறது.
பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் மீது ஏற்பட்ட பாதிப்பு குறித்து வருத்தம் தெரிவிப்பதாக SWISS நிறுவனம் கூறியுள்ளது.
மூலம்- swissinfo


