இரண்டு சுற்றுலாப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஒரு சுற்றுலாப் பேருந்து ஸ்டால்டனில் இருந்து விஸ்ப் நோக்கி மாகாண சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. முல்லாக்கர்ன் அருகே, அந்த வாகனம் எதிர் திசைப் பாதைக்குள் விலகியது.

அதே நேரத்தில், இரண்டாவது சுற்றுலாப் பேருந்து ஒன்று எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அதன் ஓட்டுநர் வாகனத்தைத் திருப்ப முயன்றார், ஆனால் இரண்டு வாகனங்களும் பக்கவாட்டில் மோதிக்கொண்டன.
விஸ்ப் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, பின்னர் சாலையை விட்டு விலகி ஒரு களஞ்சியத்திற்கு அருகில் நின்றது என்று வாலாய்ஸ் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை சுமார் 8:45 மணியளவில், இடம்பெற்ற இந்த விபத்தில் சிக்கிய சுற்றுலாப் பேருந்தில் மொத்தம் 31 பேர் பயணம் செய்தனர். அவர்களில் பதின்மூன்று பேர் காயமடைந்தனர். முதற்கட்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, காயமடைந்தவர்கள் விஸ்ப் மற்றும் சியோனில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மீதமுள்ள பயணிகளுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரண்டாவது சுற்றுலாப் பேருந்தில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர்.
மூன்று ஹெலிகொப்டர்கள் மற்றும் ஏழு ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த விபத்து ஒரு பெரிய மீட்பு நடவடிக்கையைத் தூண்டியுள்ளது. மாகாண காவல்துறையினருடன், ஏழு அம்புலன்ஸ்கள், ஒரு மீட்பு நிபுணர், இரண்டு முதலுதவிப் பணியாளர்கள் மற்றும் இரண்டு அவசரகால உளவியலாளர்களும் அனுப்பப்பட்டனர்.
மூன்று மீட்பு ஹெலிகொப்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன: இரண்டு ஏர் ஜெர்மாட் நிறுவனத்திலிருந்தும், ஒன்று ஏர்-கிளேசியர்ஸ் நிறுவனத்திலிருந்தும். விஸ்ப் மற்றும் ஸ்டால்டன் தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டனர்.
சேதமடைந்த சுற்றுலாப் பேருந்து செவ்வாய்க்கிழமை மாலை 8 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin


