கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 43 வயதான சுவிஸ் நபர் ஒருவர், திங்கட்கிழமை அதிகாலையில் ஆர்காவ் மாகாண காவல்துறையினரால், கைது செய்யப்பட்டார்.
முந்தைய இரவு ஆர்காவில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அவர் பத்துக்கும் மேற்பட்ட முறை சுட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் ஐந்து பேர் காயமடைந்தனர், மேலும் 22 வயதான எம். என்பவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் இரண்டு விதமான தோட்டா உறைகளைக் கண்டெடுத்தனர்: கைத்துப்பாக்கிகள் அல்லது துணை இயந்திரத் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 9 மில்லிமீட்டர் மற்றும் ரஷ்ய AK-74 தாக்குதல் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 5.45 × 39 அளவுள்ள ரவைகளே அவை.
ஆர்காவில் உள்ள குற்றச் சம்பவ இடத்தில், 5.45 × 39 அளவு தோட்டா உறைகள் கண்டெடுக்கப்பட்டன – இது உக்ரைன் போரிலும் பயன்படுத்தப்படும் AK-74 தாக்குதல் துப்பாக்கியின் பொதுவான அளவாகும்.
2019-ல் ஆயுதச் சட்டம் திருத்தப்பட்டதிலிருந்து, இந்த ஆயுதம் “தடைசெய்யப்பட்ட ஆயுதம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், “சிறிய” விலக்கு அனுமதி எனப்படும் ஒன்றைக் கொண்டு ஆயுதங்களை வாங்குவதும் வைத்திருப்பதும் சாத்தியமாகும்.
சுவிட்சர்லாந்தின் சில மாகாணங்களில் இந்த அனுமதியை எவ்வளவு எளிதாகப் பெற முடியும் என்பது துப்பாக்கி ஆர்வலர்களையே ஆச்சரியப்படுத்துகிறது.
மூலம்- 20min


