சூரிச்சிலிருந்து நியூயோர்க்கிற்குச் சென்ற ஒரு சுவிஸ் விமானம், நேற்று கனடாவின் சென் ஜோன்ஸ் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலையே இதற்குக் காரணமாகும்.
பாதிக்கப்பட்ட பயணிக்கு சென் ஜோன்ஸ் விமான நிலையத்தில் மருத்துவப் பராமரிப்பு அளிக்கப்படும் என்று சுவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

234 பயணிகளை ஏற்றிய அந்த ஏர்பஸ் ஏ330 விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்டு, கூடிய விரைவில் நியூயோர்க்கிற்குத் தனது பயணத்தைத் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை 7:30 மணிக்குச் சற்றுப் பிறகு, 11,000 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அந்த சுவிஸ் விமானம் ஆபத்து சமிக்ஞையை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கும்போது அந்த விமானத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த இறக்கமும் தரையிறக்கமும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்தன.
மூலம்- bluewin


