30.7 C
New York
Thursday, June 19, 2025

சுவிஸ் ஆயுதப்படைகளில் சமபாலுறவாளர்களுக்கு அநீதியா?- விசாரணைக்கு உத்தரவு.

சுவிட்சர்லாந்து ஆயுதப்படைகளில்  சமபாலுறவாளர்கள் அநீதியை எதிர்கொண்டனரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுவிஸ் அரசாங்கம் விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளது.

சுவிஸ் ஆயுதப் படைகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்  இன்று வரை,  எந்தளவிற்கு அநீதியை அனுபவித்தார்கள் என்று பேர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு அடுத்த நான்கு ஆண்டுகள் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இதன் பின்விளைவுகளையும் அந்தக் குழு கவனிக்கும்  என,  நேற்று வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டுமா என்றும், இந்த  இந்த ஆய்வுக் குழு ஆராயும்.  

மேலும் எதிர்காலத்தில் LGBTQ உரிமைகளுக்கான மரியாதையை இராணுவம் எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளையும் இந்தக் குழு வழங்கும்.

சுவிஸ் இராணுவ சட்டத்தின்படி, ஒரே பாலினத்தவர்களுக்கிடையிலான பாலியல் செயல்கள் 1992 ஆம் ஆண்டு வரை தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வந்தது.

இது சிவில் சட்டத்திற்கு முரணானதாக இருந்தது. 1942 ஆம் ஆண்டிலேயே ஒரே பாலினத்தவர்களுக்கிடையில் சம்மதத்துடன் கூடிய பாலியல் செயல்களை சிவில் சட்டம் சட்டப்பூர்வமாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் மூலம் – swissinfo

Related Articles

Latest Articles