22.5 C
New York
Thursday, June 19, 2025

பேர்ணில் திடீர் மின்தடைக்கு காரணம் என்ன?

பேர்ண் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றுக்காலை திடீரென மின்சாரம் தடைப்பட்டதற்கான, சரியான காரணம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.

நேற்றுக் காலை 10.00 மணியளவில் பரவலாக மின் தடை ஏற்பட்டது.

பல மாவட்டங்கள் மற்றும் அயலில் உள்ள சமூகங்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக மின் விநியோக அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், காலை 11.00 மணிக்குப் பின்னர், மின்சார விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டது.

ஆயினும், இந்த திடீர் மின்தடைக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.

ஆங்கிலம் மூலம் – The swiss times

Related Articles

Latest Articles