உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கம் சற்றுமுன்னர் அரசதலைவர் மாளிகையில் அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளதாக அரசதலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை(20) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தை வந்தடைந்த இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, இலங்கையின் அயலுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.