கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற மோதலில், கை துண்டிக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, இந்த மோதல் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
இதில்விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் கை துண்டாடப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.