இலங்கையில் பறவைக் காய்ச்சல் நோயாளி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் கொழும்பு தொற்றுநோய் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
அடையாளம் காணப்பட்ட நோயாளி ஒரு ஆண் என்றும், வெளிநாட்டவர் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு முதலில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று கண்டறியப்பட்டதாகவும், இன்புளூவென்சா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில நாளிதழான டெய்லி மிரர் இந்த செய்தியை வெளியிட்டது. எனினும் தற்போது அந்தச் செய்தி அதன் இணையத் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.