மின்னல் தாக்குதலால் சோலொதோர்ன் – நீடர்பிப் ரயில் பாதையில் நேற்று மதியம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை மதியம், Solothurn-Niederbipp ரயில்வேயின் மேல்நிலைப் பாதையில் மின்னல் தாக்கியதை அடுத்து, ரயில் இயக்கத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் வழக்கம்போல் ரயில் இயக்கப்பட்டது.
மின்னல் தாக்குதல்களால் ரயில் போக்குவரத்து செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவது வழக்கமான ஒன்று அல்ல என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்னல் தாக்குதலினால் ரயிலில் இருந்த பயணிகள் பதற்றத்துக்குள்ளாகிய போதும் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.
ஆங்கிலம் மூலம் – 20min