புல்லே (Bulle) பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்தனர் என்று பிரிபோர்க் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
52 வயதுடைய தந்தையும் அவரது 13 வயது மகளுமே உயிரிழந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து, அவசர மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று நடவடிக்கைளை எடுத்தனர்.
48 வயதான ஒரு பெண் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் அடித்தளத்தில் இருந்த வாகனத் தரிப்பிடத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த 60 வாகனங்கள் இதனால் சேதமடைந்துள்ளன.
இந்த தீவிபத்தை அடுத்து 90இற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஆங்கிலம் மூலம்- 20min