இதன் போது, இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகின
Buus இன் Basel-Landschaft நகராட்சியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
இதன் போது, இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகின. மேலும் 3 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தீயணைப்பு துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்ததால் மேலும் பல வீடுகளுக்கு தீ பரவுகின்ற ஆபத்து தவிர்க்கப்பட்டது.
தீவிபத்தை அடுத்து அருகில் உள்ளவர்கள் ஜன்னல்களை மூடி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டது.
இந்த தீவிபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மூலம் -20min