கற்றல் சிரமங்கள் மற்றும் நடத்தை சிக்கல்கள் உள்ள குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி வகுப்புகளை ஆரம்பப் பாடசாலைகள் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டுமா என்பது குறித்து சூரிச் மக்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
“எதிர்காலத்துடன் கூடிய பாடசாலைக்காக” என்ற தலைப்பில, இந்த சூரிச் கன்டோனல் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சேகரிக்கப்பட்ட 9,200 கையெழுத்துகளில், 6,000 க்கும் மேற்பட்ட கையெழுத்து செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
GLP, FDP மற்றும் SVP ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த முயற்சிக்கு பின்னால் உள்ளனர்.
மூலம் -Zueritoday