சூரிச் ஏரியில் பயணிகள் படகு ஒன்றில் இருந்து நேற்று மாலை 6 மணியளவில் புகை வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்டது.
கப்பலில் தீப்பற்றியிருப்பதாக அச்சம் ஏற்பட்டு மக்கள் பரபரப்படைந்தனர்.
அதேவேளை மீட்கு மற்றும் உதவிக்குழுவினர் விரைந்து சென்று படகில் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும், கப்பலில் தீவிபத்து ஏதும் நடக்கவில்லை என்றும், தீவிபத்து குறித்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகையே இது என்றும், அதிகாரிகள் தெரிவித்தன.
வழக்கத்துக்கு மாறான இந்த ஒத்திகை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மூலம்- zueritoday