இலங்கை பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க முன்னிலையில் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்
அதன் பின்னர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு, நிதி, பொருளாதார அபிவிருத்தி, தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.
நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில், கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி மற்றும் சுகாதார அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து, பொதுமக்கள் பாதுகாப்பு, வெளிவிவகாரம், சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை இன்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.