சூரிச்சில் நடந்த உலக சைக்கிள் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றிருந்த போது விபத்தில் உயிரிழந்த சுவிஸ் வீராங்கனை Muriel Furrer ஐ நினைவுகூரும் வகையில் நேற்று நடந்த நினைவு சைக்கிள் சவாரியில் சுமார் 1,500 பேர் பங்கேற்றனர்.
சுவிஸ் வீராங்கனையின் மறைவை அடுத்து, முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட பொது போட்டி ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக ‘நினைவுச் சவாரி’ நடத்தப்பட்டது.
Sechseläutenplatz இல் உள்ள சூரிச் உலக சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி வளைவில் காலை 7 மணியளவில் மக்கள் தங்கள் சைக்கிள்களுடன் கூடினர்.
அவர்கள், துயரமான மனநிலையுடன் காணப்பட்டனர். சிலர் சவாரி தொடங்குவதற்கு முன்னர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தனர், சிலரின் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது.
” Muriel Furrer இன்இழப்பிற்காக சைக்கிள் ஓட்டுதல் உலகம் துக்கம் அனுசரிக்கிறது,” என்று தொடக்கப் பகுதியில் ஒரு குறிப்பு வாசிக்கப்பட்டதை அடுத்து, சூரிச்சைச் சேர்ந்த 18 வயது வீராக்கனைக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து பங்கேற்பாளர்கள் உலக சாம்பியன்ஷிப் பாதையில், நகர மையத்தின் வழியாக அமைதியாக சைக்கிள் சவாரியில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை Küsnacht க்கு மேலே உள்ள காட்டில் கடுமையான விபத்து நிகழ்ந்த இடத்தையும் அணிவகுப்பு கடந்து சென்றது.
சூரிச்சில் உள்ள Wasserkircheஇல் ஒரு இடத்தில், Muriel Furrer இன் படம் வைக்கப்பட்டு மலர்கள்,கொடிகள், வைக்கப்பட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மூலம் – swissinfo