27.6 C
New York
Thursday, June 26, 2025

சூரிச்சில் குழந்தைகள் மீது கத்திக்குத்து – 3 குழந்தைகள் காயம்.

சூரிச் நகரில் இன்று பிற்பகல் சீன இளைஞன் ஒருவர், பகல் பராமரிப்பு மையத்திற்கு செல்லும்  குழந்தைகளை கத்தியால் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 5 வயதுடைய மூன்று குழந்தைகள் காயமடைந்தனர்.

மதியம் 12 மணிக்குப் பின்னர், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Berninastrasse இல் உள்ள பகல் பராமரிப்பு மைய ஊழியர்  ஒருவர் குழந்தைகளுடன் பகல் பராமரிப்பு மையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒருவர் குழந்தைகளை கத்தியால் தாக்கினார்.

பகல் பராமரிப்பு ஊழியர், மற்றொரு நபரின் உதவியுடன் அந்த நபரை தடுத்துள்ளார்.

குற்றவாளி 23 வயதான சீன இளைஞன் என்றும், காயமடைந்த 5 வயதுடைய மூன்று சிறுவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மற்ற இரு சிறுவர்களும், சிறுகாயம் அடைந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles