Uster நகர பூங்காவில் வேக கட்டுப்பாட்டை மீறி இ-பைக் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Uster நகர பொலிசார் இதுதொடர்பான ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மணிக்கு 20 கி.மீ என்ற வேக வரம்பை மீறி மிக வேகமாக இ-பைக் ஓட்டுவது இனி பொறுத்துக் கொள்ளப்படாது.
இதனை மீறுபவர்களுக்கு 30 பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுபவர்களுக்கும் 20 மற்றுமி 40 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – Zueritoday