Thurgau கன்டோனில் உள்ள Güttingen இல் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.
24 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற கார், Vogelsang அருகில், வலது பக்க வளைவில் கட்டுப்பாட்டை இழந்து, கார் எதிரே வந்த பாதையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
இந்தச் சம்பவத்தில் இரண்டு கார்களின் சாரதிகளும் காயம் அடைந்தனர்.
51 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற காரில் இருந்த 10 தொடக்கம் 14 வயது வரையுடைய 3 சிறுமிகளும் காயம் அடைந்தனர்.
குறித்த காரின் சாரதி, வாகனத்தில் சிக்கியிருந்த நிலையில் தீயணைப்பு பிரிவினரால் மீட்கப்பட்டார்.
மூலம் – 20min