சுவிட்சர்லாந்தில் கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (antibiotics) பாவனை அதிகரித்துள்ளது.
இருப்பினும், ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இங்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு மிகக் குறைந்த அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித மருத்துவத்தில், ஒட்டுமொத்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் நுகர்வு 2023 இல் ஒரு நாளைக்கு 1,000 பேருக்கு வரையறுக்கப்பட்ட தினசரி அளவு 10.8 ஆக அதிகரித்துள்ளது.
இது 2021 ஆம் ஆண்டில் 8.6 ஆக இருந்தது.
எனினும், சுவிஸ் நுண்ணுயிர் எதிர்ப்பு அறிக்கை 2024 இன் படி, 2019 இல் நுகர்வான, 10.6 க்கு ஒத்த நிலைக்கு இப்போது திரும்பியுள்ளது.
2023 குளிர்காலம் / வசந்த காலத்தில் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளின் பெரிய அலை, இதற்கு ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.
2014 இல் இருந்து, குறிப்பாக முக்கியமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு 2023 இல் 26% குறைந்துள்ளது.
மூலம் – swissinfo