St.Gallen இல் உள்ள Reiherweg இல் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்து புகை வரத் தொடங்கியதும் அயலவர்களால் அங்கிருந்த 81 வயது மூதாட்டி மீட்கப்பட்டார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அதிகளவில் புகையை சுவாசித்ததால் உயிரிழந்தார்.
சுமார் 80 வரையான தீயணைப்பு வீரர்களும் பொலிசாரும் இணைந்து வீட்டில் பற்றிய தீயை அணைத்தனர்.