35.6 C
New York
Monday, June 23, 2025

SBB S-Bahn ரயிலுக்கு குண்டு மிரட்டல்.

SBB S-Bahn ரயிலுக்கு நேற்று மாலை குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, Laufen BL ரயில் நிலையத்தில் ஏராளமான பொலிசாரும் தீயணைப்பு படையினரும் நிறுத்தப்பட்டு, குறித்த ரயிலில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

அத்துடன், இரு திசைகளிலும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பல மணிநேர தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர், அது வெறும் புரளி என பொலிசார் முடிவுக்கு வந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாசல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles