Constance ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு படகோட்டிகள் காணாமல் போயுள்ளனர்.
படகு போட்டியில் பங்கேற்க வந்த படகுகளில் ஒன்றே இன்று அதிகாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து காணாமல் போன படகோட்டிகள் இரண்டு பேரையும் தேடும் பணி இடம்பெற்று வருகிறது.
அவர்களை உயிருடன் மீட்க முடியும் என நம்புவதாக படகோட்டப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம் – bluewin