Thurgau கன்டோனில் உள்ள Wängi இல், பாடசாலையின் கழிப்பறைச் சுவரில் எச்சரிக்கை வாசகம் எழுதிய மாணவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை காலை இந்த எச்சரிக்கை வாசகம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை.
இந்த விசாரணைகளை அடுத்து 10 வயது சிறுவன் ஒருவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
விளையாட்டுத்தனமாக தாம் அதனை எழுதியதாகவும், அவர் கூறியுள்ளார்.
மூலம்- 20min