Lausanne இல் பேருந்தில் பயணம் செய்த மரியா என்ற பெண் Rosiaz நிறுத்தத்தில், குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
தினமும் பேருந்தில் பயணம் செய்யும் அவருக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
கிளினிக் நோக்கி பேருந்தைச் சென்று கொண்டிருந்த போதே, மரியா தனது மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தார்.
பேருந்தில் இருந்த கணவனும், சில பயணிகளும் அவருக்குத் தேவையான உதவிகளை வழங்கினர்.
பெஞ்சமின் என பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழந்தைக்கு, 25 வயது வரை இலவச பேருந்து போக்குவரத்து வசதி கிடைக்கும் என, lausannois பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
Lausanne லொசானில் இதுபோன்ற ஒரு நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லை என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், 2014 ஆம் ஆண்டில் ஜெனிவா பல்கலைக்கழக மருத்துவமனையின் மெட்ரோ நிலையத்திலும், 2010 ஆம் ஆண்டில் Biel ஒரு பேருந்திலும், பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன.
மூலம்- 20min