பெரும் பணக்காரர்கள் மீதான பரம்பரை வரிகளை உயர்த்துவதற்கான திட்டத்தை சுவிட்சர்லாந்து அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான பணத்தைத் திரட்டுவதற்காக 50 மில்லியன் பிராங்கிற்கும் அதிக சொத்துக்களைக் கொண்டவர்களுக்கு 50% பரம்பரை வரியை விதிக்குமாறு இளம் சோசலிஸ்ட் அரசியல் குழு இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
அதிக வரிகள் நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் மற்றும் அவை திரட்டுவதை விட அதிகம் செலவாகும் என்று அரசாங்கம் பதிலளித்துள்ளது.
புதிய வரி மூலம், 4 பில்லியனுக்கும் அதிகமாக பிராங்கை திரட்ட முடியும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறுவதால், சாத்தியமான நிதி வருவாயில் முக்கால்வாசிக்கும் அதிகமான இழப்பு ஏற்படும்.
பணக்கார குடியிருப்பாளர்களின் வெளியேற்றம் மற்ற வருமானம் மற்றும் சொத்து வரிகளையும் பாதிக்கும், என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo