சூரிச்சில் ஒன்பது நாட்களுக்கு முன்னர் Quellenstrasse நிறுத்தத்தில், பாதசாரி கடவையில், ட்ராம் மோதியதில் காயமடைந்த 81 வயது முதியவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மாவட்டம் 5 இல் டிசம்பர் 4,ஆம் திகதி மாலை இந்த விபத்து இடம்பெற்றது.
அந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஓய்வூதியம் பெறுபவரான பாதசாரி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் வெள்ளிக்கிழமை மாலை மருத்துவமனையில் இறந்தார் என்று சூரிச் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம் – 20min.