-0.7 C
New York
Sunday, December 28, 2025

அடுத்து வரப்போகிறது சூறைக்காற்று – மத்திய அரசு எச்சரிக்கை.

அல்ப்ஸ் மற்றும் அல்ப்ஸ் மலையடிவார பகுதிகளுக்கு  கடும் காற்று குறித்து மத்திய அரசாங்கம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே பனிச்சரிவு அபாயம் அதிகமாக உள்ள நிலையில், இன்று  இரவு 10 மணி முதல் காற்றின் வேகம் ஆபத்தானதாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கை திங்கட்கிழமைக்கும் பொருந்தும்.

தாழ்வான பகுதிகளில் மணிக்கு 90 முதல் 120 கிமீ வேகத்திலும், 1,800 மீட்டருக்கு மேல் மணிக்கு 160 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரங்கள், கிளைகள் முறிந்து விழும். கூடாரங்கள் அல்லது சாரக்கட்டு போன்ற தளர்வாக பாதுகாக்கப்பட்ட பொருட்களுக்கு சேதம் ஏற்படும்.

ஸ்கை லிப்ட் மற்றும் கேபிள் கார்களின் செயல்பாடும் பாதிக்கப்படலாம்.

மக்கள் காடுகளை தவிர்க்கவும், மரங்கள் அல்லது கட்டுமான தளங்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் Meteo Switzerland அறிவுறுத்துகிறது.

மூலம் -20min

Related Articles

Latest Articles