27.6 C
New York
Thursday, August 13, 2026

சூரிச்சில் பண மழை பொழிந்த டிக் டொக்கருக்கு தண்டனை.

சூரிச்சின் Chinawieseஇல்,  பண மழை பொழிந்த டிக் டொக்கர் Joung Gustav க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்து.

கடந்த ஆண்டு மே மாதம்,10 பிராங்க் நாணயத்தாள்களாக, ட்ரோனில் இருந்து 24,000 சுவிஸ் பிராங்குகளை, இளைஞர்களின் தலையில் வீசினார்.

இந்தக் கலவரத்தில், ஒரு 12 வயது சிறுவன் கூர்மையான பொருளால் பலத்த காயம் அடைந்தான்.

இதற்காக அதிகாரிகள் 3 நடவடிக்கைகளை எடுத்தனர்.

இதில், ட்ரோன் மற்றும் அனுமதி விதிமுறைகளை மீறியது தொடர்பான  நடவடிக்கையின் அடிப்படையில்,  32 வயதான Joung Gustav அபராத உத்தரவைப் பெற்றுள்ளார்.

அவர் தனது நடவடிக்கையை சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார், ஆனால் நகர காவல்துறையிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவில்லை.

டிசம்பர் 5 ஆம் திகதிய உத்தரவில், “குற்றம் சாட்டப்பட்ட நபர் தெரிந்தே மற்றும் வேண்டுமென்றே பொது இடத்தை சிறப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினார் என்றும் அங்கீகரிக்கப்படாத நிகழ்வை விளம்பரப்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தண்டனையாக, டிக் டோக்கர் 450 பிராங்குகள் அபராதம் செலுத்த வேண்டும்.

குஸ்டாவ் அபராத உத்தரவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பான நடவடிக்கை இப்போது மூடப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் மீதான விசாரணை முடிவடையவில்லை மற்றும் மேலும் விசாரணை அணுகுமுறைகள் தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், பொதுமக்களிடமிருந்து வரும் குறிப்புகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தடயங்கள் வெளிப்பட்டால், வழக்கை மீண்டும் திறக்கலாம் என்று சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மூலம்- 20 min.

Related Articles

Latest Articles