19.4 C
New York
Friday, May 15, 2026

தீவிபத்தினால் 20 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்.

விஸ்ப், பன்ஹோஃப்ஸ்ட்ராஸில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து 20 பேர் அங்கிருந்து வெளியியேற்றப்பட்டனர்.

வலாய்ஸ் கன்டோனல் காவல்துறைக்கு இந்த தீவிபத்து குறித்து நேற்று அதிகாலை 2:30 மணிக்கு தகவல் கிடைத்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, பாதிக்கப்பட்ட வீடு மற்றும் அண்டை வீட்டிலிருந்து சுமார் 20 பேர் வெளியேற்றப்பட்டனர்.

அதிகாலை 4:30 மணியளவில் அவசர சேவைகளால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

புகையைச் சுவாசித்த  இரண்டு பேர் முன்னெச்சரிக்கை சோதனைகளுக்காக விஸ்ப் மாகாண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அண்டை வீட்டின் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடிந்தது.

தீ விபத்துக்கான சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles