4.4 C
New York
Sunday, February 22, 2026

7 மாதங்களாக போக்கு காட்டிய குற்றக்கும்பல் தலைவன் கைது.

Camorra clan Lo Russoவின்  கிளையான, Naples இன் வடக்கில் செயல்படும்,  அதே பெயரில் உள்ள குற்றவியல் குழுவின் முன்னணி தலைவராக ஒஸ்கார் பெகோரெல்லி (46), நேற்று  Sion இல்  கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏழு மாதங்களாக தலைமறைவாக இருந்த இவர், Valais கன்டோனல் பொலிசாரின் ஆதரவுடன் இத்தாலிய  பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

ஐரோப்பிய பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டஅவர், இத்தாலிக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.

ஒஸ்கார் பெகோரெல்லி ஜூன் மாதம் கைது நடவடிக்கையிலிருந்து தப்பினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், நீதிபதி பிறப்பித்த பிடியாணை 17 சந்தேக நபர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டபோது, ​​பெகோரெல்லி கைது செய்யப்படுவதில் இருந்து தப்பினார்.

சந்தேக நபர்கள் மீது மாஃபியா போன்ற தொடர்புகள், கொலைகள், தாக்குதல்கள், பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு, இராணுவ மற்றும் ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் எடுத்துச் செல்வது, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles