17.5 C
New York
Wednesday, September 10, 2025

தபால் நிலையத்தில் கொள்ளை.

சூரிச்சில், Höngg district மாவட்டத்தில் உள்ள Gsteigstrasse இல் தபால் நிலையத்தில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

நேற்றுக்காலை 11 மணியளவில் முக மூடி அணிந்த ஒருவர், தபால் நிலைய பணியாளரை அச்சுறுத்தி அங்கிருந்த நூற்றுக்கணக்கான பிராங் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

தப்பிச் சென்ற கொள்ளையரை பிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles