-0.4 C
New York
Tuesday, February 24, 2026

அம்ஸ்டர்டாமில் கத்திக்குத்து தாக்குதல் – 5 பேர் படுகாயம்.

நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்டர்டாமின் மையப்பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அம்ஸ்டர்டாம் அரச அரண்மனைக்கு முன்னால் உள்ள மத்திய சதுக்கத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

நபர் ஒருவர் பொதுமக்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குற்றத்தின் சரியான போக்கு அல்லது நோக்கம் குறித்து காவல்துறையினரால் இன்னும் எதுவும் கூற முடியவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் காயங்களின் தன்மை குறித்தும் காவல்துறையினரால் எதுவும் கூற முடியவில்லை.

காயம் அடைந்தவர்களில் இருவர் அமெரிக்கர்கள் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தை ஒன்றும்,முதிய பெண் ஒருவரும் காயம் அடைந்துள்ளனர்.

மூலம்-bluewin

Related Articles

Latest Articles