சுவிட்சர்லாந்தில் உள்ள ஆறில் ஒரு வீடு இயற்கை அபாயங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான பகுதியில் அமைந்துள்ளதாக Zürcher Kantonalbank (ZKB) இன் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக கிராபண்டன் மாகாணத்தில் உள்ள மலை கிராமமான Brienz , சமீப காலங்களில் இரண்டு முறை வெளியேற்றப்பட்டது.
2024 கோடையில், கிராபண்டன் மாகாணத்தில் உள்ள மிசாக்ஸ் பகுதியிலும், டிசினோவில் உள்ள மாகியா பள்ளத்தாக்கிலும் மோசமான புயல்கள் காரணமாக பலர் தங்கள் வீடுகளை இழந்தனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள பல வீட்டு உரிமையாளர்கள் இத்தகைய நிகழ்வுகளால் பாதிக்கப்படலாம் என்பதைக் காட்டுகிறது.
மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள கிளாரஸ் மாகாணத்தில் அனைத்து குடியிருப்பு கட்டிடங்களில் கிட்டத்தட்ட அரைப்பகுதி, குறைந்தபட்சட்“ ஒரு இயற்கை ஆபத்திற்கு ஆளாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து வலாய்ஸ் (36%), ஷ்விஸ் (30%), கிராபண்டன் (29%) மற்றும் சென் கலன் (27%) ஆகிய மாகாணங்கள் உள்ளன.
மூலம்- swissinfo

