Neftenbach அருகே உள்ள Aesch இல், நேற்று அதிகாலை தபால் பேருந்துடன் மோதியதில் கார் ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்தார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:30 மணியளவில், 19 வயது நபர் ஓட்டி வந்த கார், எதிர் பாதையில் சென்று தபால் பேருந்தின் மீது மோதியதாக சூரிச் கன்டோனல் பொலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
இதில் கார் ஓட்டுநர் காரில் சிக்கிக் கொண்டார்.
துணை மருத்துவர்கள் ஆரம்ப மருத்துவ சிகிச்சை அளித்தபோது, தீயணைப்புத் துறையினர் அவரைக் காரில் இருந்து மீட்டனர்.
அவசர மருத்துவ சேவைகள் பலத்த காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தபால் பேருந்து பயணிகள் இல்லாமல் தரிப்பிடத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அதில் இருந்த ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளி காயமடையவில்லை.
மூலம் –bluewin