யாழ்ப்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.
வட்டுக்கோட்டையை சேர்ந்த தாய் ஒருவருக்கே, கடந்த 24ஆம் திகதி 5 குழந்தைகளும் பிறந்துள்ளன.
அவற்றில் 3 ஆண் குழந்தைகள் என்றும், 2 பெண் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.