25.1 C
New York
Wednesday, June 25, 2025

பாசல் அருங்காட்சியகத்தில் பழங்கால ரஷ்ய மோதிரம் திருட்டு.

பாசல் அருங்காட்சியகத்தில் இருந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ரஷ்ய மோதிரம், அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.

இந்த மோதிரம் 1814 ஆம் ஆண்டு பாசலில் உள்ள தனது விருந்தினருக்கு ரஷ்யாவின்  ஜார் அலெக்சாண்டர் I வழங்கிய பரிசாகும்.

கடந்த மே மாத இறுதியில் திருட்டு இடம்பெற்றதை கண்டுபிடித்ததாக ஹவுஸ் ஜூம் கிர்ச்கார்டன் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

இந்த மோதிரம் எச்சரிக்கை அமைப்பு பொருத்தப்பட்ட காட்சிப் பெட்டியில் இருந்தது.

திருட்டு உடனடியாக கவனிக்கப்படவில்லை என்று  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாசல் வரலாற்று அருங்காட்சியகத்தின்  ஆரம்ப விசாரணை நடவடிக்கைகள் தோல்வியடைந்ததை அடுத்து, அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்துது குற்றத்தை பகிரங்கப்படுத்த முடிவு செய்துள்ளது.

காணாமல் போன கலாசார சொத்துக்களின் சர்வதேச தரவுத்தளத்திலும் மோதிரத்தைப் பதிவு செய்து, அதன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பகுப்பாய்வு மற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கியது.

திருடப்பட்ட மோதிரத்தின் வரலாற்று மதிப்பு அதன் பொருள் மதிப்பை விட அதிகம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு வரலாற்று அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் சேர்க்கப்பட்ட இந்த மோதிரம்  “B M” என்ற முதலெழுத்துக்களைக் கொண்டுள்ளது.

1813/1814 ஆம் ஆண்டில், ஜார் அலெக்சாண்டர் I (1777-1825), அவரது இராணுவம் மற்றும் அவரது ஒஸ்திரிய மற்றும் பிரஷ்ய கூட்டாளிகள் நெப்போலியன் I க்கு எதிரான போரின் போது, பாசல் வழியாகச் சென்றனர்.

ரஷ்ய மன்னர் முன்னாள் மடாலயமான செகர்ஹாப்பில் தங்கினார்.

அவரது நன்றியுணர்வின் அடையாளமாக, அவர் வீட்டின் பெண்மணி டோரோதியா பர்கார்ட்-மெரியனுக்கு ஒரு ப்ரூச் வழங்கினார். இந்த ப்ரூச் பின்னர் ஒரு மோதிரமாக மாற்றப்பட்டது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles