வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அண்ட்ரியாஸ் கிளார்னர் தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை இழந்துள்ளார்.
இடதுசாரி பசுமைக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிபெல் அர்ஸ்லான் சம்பந்தப்பட்ட டீப் பேக்கைப் பயன்படுத்தியது தொடர்பாக, செனட்டின் சட்ட விவகாரக் குழு இந்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
2023 தேர்தல் பிரச்சாரத்தின் போது, துருக்கியில் பிறந்த அர்ஸ்லானின் போலி வீடியோவை கிளார்னர் வெளியிட்டார்.
அவர் அனைத்து துருக்கிய குற்றவாளிகளையும் நாடு கடத்துவதை ஆதரிப்பதாகவும், மக்கள் கிளார்னருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.
எனவே, கிளார்னரின் சிறப்புரிமையை நீக்க எட்டு வாக்குகள் வித்தியாசத்தில் செனட் குழு முடிவு செய்தது.
அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo