வலைஸில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில், 51 வயதுடைய சுவிஸ் நபர் ஒருவர் உயிரிழந்தார்.
கிராஸஸ் ஃபுஷோர்ன் மற்றும் பனிப்பாறைக்கு இடையில் 2,500 மீட்டர் உயரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹெலிகொப்டர் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தது என்றும், அதில் மூன்று பேர் இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஹெலிகொப்டர் தரையில் மோதிய பின்னர் பக்கவாட்டாக சாய்ந்துள்ளது.
இதில், 51 வயது நபர் உயிரிழந்தார். விமானி மற்றும் விமான உதவியாளருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
மூலம்- bluewin