23.3 C
New York
Wednesday, July 9, 2025

ஏரியில் குதித்த போதைப்பொருள் வியாபாரி- விரட்டிப் பிடித்த பொலிஸ்.

சூரிச்சில் பொலிசாரிடம்  இருந்து தப்பிப்பதற்காக  ஏரியில் குதித்தவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

சூரிச் கன்டோனல் பொலிசார் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சூரிச் நகரைச் சுற்றி போக்குவரத்து சோதனைகளை நடத்தி, ஓட்டுநர்களின் ஓட்டுநர் திறனைச் சரிபார்த்தனர்.

சோதனையின் போது நிறுத்தப்பட்ட காரில் இருந்த ஒரு பயணி தப்பிச் சென்று சூரிச் ஏரியில் குதித்தார்.

அவரைப் பின்தொடர்ந்த அதிகாரிகள் அவரையும்,   வாகனத்தில் இருந்த மற்ற இரண்டு பேரையும்  கைது செய்துள்ளனர்.

தப்பிக்கும் போது, அவர் வீசிய பல சிறிய பிளாஸ்டிக் பைகளில் கொகெயன் இருந்ததால் , 45 வயதான அந்த ஜெர்மனியர்  ஒரு போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படுகிறது.

அவர், வாகனத்தில் பயணித்த 32 வயதுடைய ஜெர்மனியர் மற்றும் 38 வயதுடைய ருமேனியர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பயணிகளாக வந்திருந்தனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles