சூரிச் பாராளுமன்றத்தைப் பின்பற்றி, சென்.காலன் மாகாண பாராளுமன்றம், மேல்நிலைப் பாடசாலைகளில் பிரெஞ்சு மொழியைக் கற்பிப்பதை ஒத்திவைக்க வாக்களித்துள்ளது.
இந்த வாக்கெடுப்பு பாடசாலை ஒத்திசைவு ஒப்பந்தத்திற்கு (HarmoS) முரணானது.
புதன்கிழமை சென் காலன் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி, தொடக்கப் பாடசாலைகளில் இரண்டாவது தேசிய மொழியைக் கற்பிப்பது மாணவர்களுக்கு கூடுதல் சுமையாகும், நீண்டகால நன்மைகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஒருவர் வாக்களிக்கவில்லை.
மூலம்- swissinfo

